இன்றைய விவாதம்

 

Ravindran is with Vchinnadurai Durai and 
19 others
.

14h 
முரண்பாடு அனைத்தையும் தழுவியது. ஒரு அமைப்பில் குறை நிறை இரண்டும் இருக்கும். ஆனால் ஒரு அமைப்பின் மீது வெறுப்பு கொண்டு அதனிடத்தில் குறை மட்டுமே உள்ளது என்று வாதிடுவது நமது குறையை அறிந்துகொண்டு களையப் பயன்படாது. மேலும் நமது கடந்தகால சிறப்புத் தன்மையை மேலும் வளர்க்க வேண்டும் என்பதை மறுப்பதாகும். மேலும் குறைகளை களைவதற்கான வழிமுறைகளையும் நாம் சொல்ல வேண்டும். அதுதான் நாம் படிப்பினை பெற்று வளர்வதற்கு பயன்படும் விமர்சன முறையாகும். மேலும் தவறு என்று தெரியும் போது கோப்ப்படுவது அவசியமே ஆகும். அவ்வாறு கோப்ப்படாமல் இருப்பது குட்டிமுதலாளித்துவ சமரசமே ஆகும். தாராளியம் பற்றிய மாவோவின் கட்டுரையைப் படியுங்கள் புரியும். தவறுகளை எதிர்த்துக் கோபம் கொண்டு போராடாமல் இருப்பது தாராளியம் என்கிறார் மாவோ. இங்கு யாரும் மார்க்சிய லெனினியப் பார்வையில் சிறந்த கட்சியை உருவாக்கவில்லை என்றால் நமது கடந்தகால வரலாற்றில் நமது சிறப்புப் பணியையும் தவறுகளையும் பகுத்து ஆராய வேண்டும். ஆனால் இங்கு சிலர் எம்எல் கட்சி செய்ததெல்லாம் தவறு என்று வாதிடுவதன் மூலம் வலது சந்தர்ப்பவாத திருத்தல்வாதத்துக்கு ஒரு சரியான அடி கொடுத்தது எம்எல் கட்சியாகும் என்பதை மறைக்கிறார்கள். மாணவர்களையும் இளைஞர்களையும் திரட்டி கல்கத்தா நகரத்தையே அதிர வைத்தது எம்எல் கட்சி, கெரோ என்ற போராட்ட வடிவத்தை அறிமுகப் படுத்தியது எம்எல் கட்சி, தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் பாதுகாப்பிற்காகப் போராடி பல உயிர் தியாகம் செய்த்து எம்எல் கட்சி. இந்தியாவில் மக்களுக்காகப் போராடி உயிர் தியாகம் செய்த கட்சிகளிலேயே முதன்மையான கட்சி எம்எல் கட்சி. அது போன்று தியாகிகள் அடங்கிய கட்சியை இப்போது எங்குமே பார்க்க முடியவில்லை. தியாகத்துக்கு முன்உதாரணம் எம்எல் கட்சி. போர்க்குணமிக்கப் போராட்டத்துக்கு முன்உதாரணம் எம்எல் கட்சி. இதுபோன்ற சிறப்புத் தன்மை கொண்டதுதான் எம்எல் கட்சி இதனை மூடிமறைத்துவிட்டு நக்சல்பாரிகளிடம் தவறுகள் மட்டுமே உள்ளது என்று வாதிடுபவர்களைப் பார்த்து நக்சல்பாரிகள் தவறானவர்கள் என்றால் சரியானவர்கள் யார் என்று கேள்வி எழுப்புவதில் என்ன தவறு இருக்கிறது.
All reactions:
You, Subramani Kumarasamy, Gnana Suriyan Munisamy and 9 others
14 comments
5 shares
Like
Comment
Share
Most relevant

Palani Chinnasamy
எதிர்கால தவறுகளை தவிர்பதற்கு கடந்தகால தவறுகளிலிருந்து படிப்பினை பெறுவோம் நமது முன்னோடிகளின் தியாகத்தை போற்றுவென்பது அவர்களின் செயலின் உண்ணதம் அர்பணிப்பு என்பதோடு படிப்பினைகளும் உள்ளன தோழர் இதனை எப்படி மூடிமறைத்து விட்டு கடந்து செல்ல முடியும்.
Pcpi Pcpi
எம். எல். கட்சித் தோழர்களுக்கு எம். எல். கட்சியின் வரலாற்றை தவிர இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை பற்றி எதுவும் தெரியாது என்றே நினைக்கத் தோன்றுகிறது!
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறையை சந்தித்து உருவான கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. எண்ணற்ற தோழர்களின் உயிர் தியாகத்தை , சிறை கொட்டடியை சந்தித்த கட்சி 1947 சுதந்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது பிரகடனம் செய்து ஒடுக்குமுறைக்கு உள்ளான கட்சி நேரு தலைமையிலான அரசினால் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தோழர்களை இழந்த கட்சி தெலுங்கான, தெபாக, புன்னப்புற வயலார் போராட்டங்களை நடத்திய கட்சி. கப்பற்படை எழுற்சியை நிகழ்த்திய கட்சி. சர்வதேச அரசியல் நிலையில் சில தவரான முடிவுகள் எடுத்த போதிலும் எம். எல் கட்சியை விட தியாகம் செய்த கட்சி.
அந்தத் தவரான முடிவுகளின் காரணமாக தற்போது வலது சாரிப்பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.
சீனப்புரட்சியை ஆதரித்ததினால் ஒடுக்குமுறைக்கு உள்ளான கட்சி. இதையெல்லாம் மறைத்துவிட்டு ஏதோ எம். எல். கட்சி மட்டுமே தியாகம் செய்ததாக போற்றுவது குருங்குழு வாத குட்டி முதலாளித்துவ வர்க்க குணாம்சம்.
நக்சல்பரி கிராமத்தில் ஏற்பட்ட விவசாயிகளின் எழுற்சியை இந்திய நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளை எழுற்சியுறச் செய்ய முடியும் என்ற நிலைபாடும் விவசாய வர்க்கத்தை வர்க்கப் புரட்சியின் முன்னணிப் படையாக தீர்மானித்ததும், சீன நாட்டைப்போல நமது நாட்டிலும் அதே பாணியில் புரட்சி நடத்த முடியும் என்று திட்டமிட்டதும் எந்த வகை மார்க்சியப் பார்வை என்று எம். எல். தோழர்கள் விளக்கினால் புரிந்துகொள்கிறேன்.
உயிர்த்தியாகம் செய்வதாலேயே அந்தக்கட்சியை புரட்சிகர கட்சி என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அதன் கொள்கை கோட்பாட்டு முடிவுகளைக் கொண்டும், அதன் செயல் யுக்தியை கொண்டும் தீர்மானிக்கப்பட வேண்டும். மக்கள் யுத்தமும் மாவோயிஸ்டுகளும் பரஸ்பரம் சுட்டுக் கொன்ற வரலாறும் உள்ளது!
சரியான லெனினிசப் பார்வையில் ஒரு கட்சி கட்டப்படவில்லை. காப்பி பேஸ்ட் பண்ண கட்சிகள் தான் கட்டப்பட்டன.
  • Like
  • Reply
  • Edited
Subramani Kumarasamy
. இந்தியாவில் சரியான மார்க்சிய லெனினிய கட்சி இன்னும் உருவாகவில்லை சரிதான்
2
  • Like
  • Reply
Annupurselvaraj Selvaraj
சிபிஐ லெனின் தலைமையிலான மூன்றாவது அகிலத்தின் லெனினிய வழிகாட்டல் அடிப்படையில் (மார்க்சிய)
கட்டப்பட்டது.அதன் அடிப்படையில் தேசிய விடுதலை, நிலப்பிரபுத்துவ ஒழிப்பு ஜனநாயகம் என்கிற திட்டத்தின் அடிப்படையில் கட்சி செயல்பட்டது.அதில் தவறுகள், விமர்சனம் உண்டு.ஆனால் லெனினுக்க பிந்தைய மூன்றாவது அகிலத்தின் (மார்ஷல் ஸ்டாலின்) மார்க்சிய விரோத வழிகாட்டலின் விளைவாகவே இரண்டாவது உலகப் போரின் போது "பாசிச எதிர்ப்பு"என்ற பெயரில் தேசவிடுதலைப் போராட்டத்தை கைவிட்டு பிரிட்டன் ஆதரவு நிலையை மேற்கொண்டது.
ஆனால் எம் எல் கட்சி மார்க்சியத்தின் அடிப்படை கண்ணோட்டமான இயக்கவியல் கண்ணோட்டத்தை நிராகரித்து அதாவது எதிர்மறைக் மின் ஒற்றுமையே ஒரு பொருள் என்கிற விஞ்ஞான கண்ணோட்டத்தை நிராகரித்து ஒத்த கருத்து கொண்ட கட்சி,
மாறுபட்ட கருத்துகளை பகையாக கருதும் போக்குகளை கொண்ட கட்சியாக கட்டப்பட்டது.அதன் விளைவாக எம் எல் கட்சி சிதறுண்டு போனது.
  • Haha
  • Reply
Pcpi Pcpi
எம், என். ராய் அவர்கள் இந்தியா சார்பாக 3 ஆம் அகிலத்தில் பங்குபெறச் சென்றவர் அறிக்கை ஏதுமின்றி சென்றார். அறிக்கையின்றி அகலத்தில் பங்குபெற முடியாது என்ற அகிலத்தின் முடிவினால் இரவோடு இரவாக அறிக்கையை தயார் செய்து அகிலத்தில் முன்வைத்தார். தோழர் லெனின் அவர்களால் இது ஒரு குட்டி பூர்ஷ்வா அறிக்கை நிராகரிக்கப் பட்டது.
1952 வரை கட்சி திட்டமே உருவாக்கப்படவில்லை. அப்படியிருக்க லெனின் தலைமையில் வழிகாட்டப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
  • Like
  • Reply
Subramani Kumarasamy
Pcpi Pcpi இந்திய கம்யூனிஸ்டுகளின் மிகப்பெரிய குறைபாடு என்பது வரலாற்றுப் பொருள் முதல்வாத ரீதியில் சமுதாயத்தை புரிந்து கொள்ளாததே ஆகும் அதன் விளைவு அகநிலை சிந்தனைகளும் குறுங்குழு வாத போக்குகளும் தலைதூக்கி சீரழிந்து கொண்டு இருக்கிறது.
  • Like
  • Reply
Annupurselvaraj Selvaraj
அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் எம் என் ராயின் அறிக்கை தான் (லெனினின் திருத்தங்களுடன்) தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
நிராகரிக்கப்படவில்லை.
இரவோடு இரவாக அறிக்கை தயாரிக்கவில்லை அறிக்கை தயார் செய்யும் பொறுப்பு எம்என் ராய்க்கு தான் வழங்கப்பட்டது.
  • Like
  • Reply
Pcpi Pcpi
லெனின் தலைமையில் அமைக்கப்பட்டது மூன்றாம் அகிலம். இரண்டாவது காங்கிரஸ் என்பது புரியவில்லை.
Palani Chinnasamy
Annupurselvaraj Selvaraj ஏம்பா செல்வராஜ் ஸ்டாலிந்தான் தவறு செய்தார் உங்களின் 4ம் அகிலம் என்ன செய்தது? அல்லது கட்சி கட்ட வேண்டாம் புரட்சி செய்ய வேண்டாம் என்று ஸ்டாலின் சொல்லி விட்டால் நீங்கள் சாப்பிடாமல் தூங்காமல் இருந்து விடுவீர்களா? அடிபடையில் மார்கசிய விரோதியாக செயல்படும் ஒருவர் எப்படி மார்க்சிய ஆசான்கள் மீது சேற்றை வாறி இறைக்க முடிகிறது? உங்களை போன்ற ஓடுகாலிகளும் பிழைப்புவாதிகளும் சற்று முட்டுக் கொடுங்கள் ஏகாதிபத்தியத்திற்கும் உங்கள் தலைவனுக்கு அவை மக்கள் புரிந்துக் கொள்ளாத வரையே! ஸ்டாலின் மீது புகார் வாசிக்கும் நீர் ஏன் உங்கள் ஆசானின் ஜெர்மன் மற்றும் ஜப்பானிடம் பேரம் பேசியது எதற்கென்றாவது இதே நேர்மையில் சொல்லி விடுங்கள் பாவம் அவர்களை எத்தனை காலம் இருட்டரையில் வைத்திருப்பீர்.
Palani Chinnasamy
Pcpi Pcpi உங்கள் புரிதலும் அவ்வள்வுதான் 1919 மூன்றாம் அகிலம் கட்டப்பட்டது அதன் இரண்டாம் காங்கிரஸில் உலக கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி இயங்க வேண்டும் யாரெல்லாம் கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேரலாம் என்று லெனின் வழிகாட்டினார். அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பொருட்டாக நினைக்கவேயில்லை மேலும் அந்த வழிகாட்டுதலை ஏற்கவேயில்லை. மேலே பேசும் ட்ராட்ஸ்கிய ஆசான் சொல்வது போல் அகிலத்தின் பணி வழிகாட்டுவதுதான் கட்சி கட்டி புரட்சி நடத்தி கொடுப்பதல்ல ... ரசிய புரட்சியை ரசிய மக்கள் நடத்தினர் அப்படியெனும் பொழுது இந்திய புரட்சியை இந்திய மக்கள் நடத்த வேண்டுமென்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் வழிகாட்ட வேண்டும் அதனை செய்ய முடியாதவர்கள்தான் இதுவரை தலைவர்களாக இருந்துள்ளனர் அதற்கு மேலே குறிப்பிடுவது போல ஸ்டாலினோ மாவோ காரணம் அல்ல ... நீங்கள் முழுமையாக தெரிந்து பேசுங்கள் குறைகாணுவதல்ல சரியான வரலாற்று புரிதலும் அவசியம்
  • Like
  • Reply
Palani Chinnasamy
Annupurselvaraj Selvaraj தவறு - ட்ராட்ஸ்கி சொன்னாரா?
  • Like
  • Reply
  • Edited
Palani Chinnasamy
Annupurselvaraj Selvaraj 1919 மூன்றாம் அகிலம் கட்டப்பட்டது அதன் இரண்டாம் காங்கிரஸில் உலக கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி இயங்க வேண்டும் யாரெல்லாம் கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேரலாம் என்று லெனின் வழிகாட்டினார். அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பொருட்டாக நினைக்கவேயில்லை மேலும் அந்த வழிகாட்டுதலை ஏற்கவேயில்லை. ட்ராட்ஸ்கிய ஆசானே அகிலத்தின் பணி வழிகாட்டுவதுதான் கட்சி கட்டி புரட்சி நடத்தி கொடுப்பதல்ல ... ரசிய புரட்சியை ரசிய மக்கள் நடத்தினர் அப்படியெனும் பொழுது இந்திய புரட்சியை இந்திய மக்கள் நடத்த வேண்டுமென்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் வழிகாட்ட வேண்டும் அதனை செய்ய முடியாதவர்கள்தான் இதுவரை தலைவர்களாக இருந்துள்ளனர் அதற்கு மேலே குறிப்பிடுவது போல ஸ்டாலினோ மாவோ காரணம் அல்ல ... நீங்கள் முழுமையாக தெரிந்து பேசுங்கள் குறைகாணுவதல்ல சரியான வரலாற்று புரிதலும் அவசியம்... பொய்யான தகவல்களை உங்கள் சீடர்களிடம் பரப்புங்கள் மார்க்சிய நூல் படிக்காதவர்களிடம் பரப்புங்கள்.... ஏகாதிபத்தியம் பேசாத பொய்யையெல்லாம் பேசும் உங்களின் நோக்கம் மார்க்சியதை வளர்க்க அல்ல சிதைக்க மட்டுமே மார்க்சிய விரோதியே
  • Like
  • Reply
Subramani Kumarasamy
எல்லா கட்சிகளிலும் தவறுகள் இருக்கிறது சிபிஐ ஆக இருந்தாலும் சரி எம்மாக இருந்தாலும் சரி அதேபோல நக்சல் எம் எல் கட்சிகள் எதுவாக இருந்தாலும் அவைகள் எதுவும் சரியான விதத்தில் இந்திய சமூகத் தன்மையை புரிந்து கொண்டு இங்கு கையாள வேண்டிய நடைமுறை தந்திரங்களை கையாளவில்லை அதற்கு காரணம் புத்தகங்களை படிக்க வேண்டியது படித்துவிட்டு தனக்கு விருப்பமான கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே செயல்முறை படுத்துவது என்ற தன் முனைப்பு வாதங்களே இங்கு தலை தூக்கி இருந்திருக்கிறது. நிலைமையைப் புரிந்து மக்களுடைய சிந்தனை மற்றும் உளவியலை தெரிந்து கொண்டு
எங்கிருந்து தொடங்குவது என்ற புரிதல் அற்ற நிலையில் அதாவது சமூக பொருளாதார வரலாற்று சிந்தனை இல்லாமல் விரிவடைந்த புரிதல் இல்லாமல் குறுகிய வட்ட சிந்தனையில் முடிவெடுத்து செயல்படுத்தும் பொழுது அதன் போக்கில் தோல்வியை தழுவுகிறது .
வருங்கால சிந்தனையாளர்கள் ஆவது சமூக ஆய்வு கண்ணோட்டத்தை முறையாக மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது .
  • Like
  • Reply

Comments

Popular posts from this blog

பெண்கள் பற்றி பெண்கள்

நானும் இயக்கத்தில்